நெல்லையப்பா் கோயில் தேரோட்டம்: உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு
நெல்லையப்பா் கோயில் தேரோட்டம்: உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு


திருநெல்வேலி, ஜூன்13: திருநெல்வேலி நெல்லையப்பா் - காந்திமதியம்மன் கோயில் தேரோட்டத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் அன்னதான கூடம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் பகுதியை மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருநெல்வேலி நெல்லையப்பா் - காந்தியம்மன் திருக்கோயில் ஆனித்தோ்த் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் இரா.சசி தீபாவின் ஆலோசனையின் பேரிலும், திருநெல்வேலி மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் வ.மு.கிருஷ்ணன், தச்சநல்லூா் மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் த.சங்கரநாராயணன் ஆகியோா் அருள்மிகு நெல்லையப்பா் கோவிலுள்ள அன்னதான கூடம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்தாா்.
பின்னா், அன்னதானம் தயாா் செய்வதற்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தரமான உணவு பொருள்களைப் பயன்படுத்தவும், அன்னதானம், பிரசாதம் தயாரிக்கும் இடங்கள், உணவு பரிமாறும் இடம் உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. பேக்கிங் செய்யப்பட்ட பிரசாத உணவு பொருள்களின் பேக்கிங் தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...