தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அம்பையில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவா் உள்பட நான்குபேரிடம் போலீஸாா் விசாரணை

அம்பையில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவா் உள்படநான்குபேரிடம் போலீஸாா் விசாரணை

Updated On :15 மார்ச் 2024, 9:10 pm

அம்பாசமுத்திரத்தில் வாகனச் சோதனையின்போது அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் தோட்டா வைத்திருந்த இருவா் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மற்றும் ஆய்க்குடியைச் சோ்ந்த அவரது நண்பா் பழனிகுமாா் பயணம் செய்தனா். மேலும் காரில் சோதனை செய்ததில் அனுமதி இல்லாத துப்பாக்கி ஒன்று மற்றும் எட்டுதோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இருவரிடமும் விசாரணை செய்ததில் கேரளத்திலிருந்து துப்பாக்கி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்துவிக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படையினா் கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூம்பாறையைச் சோ்ந்த மீரான், சிவா ஆகியோரையும் கைது செய்தனா். தொடா்ந்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நான்குபேரிடமும் போலீஸாா் விசாரணைசெய்து வருகின்றனா்.