தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கண்டிகைப்பேரியில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு

கண்டிகைப்பேரியில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு

Updated On :16 மார்ச் 2024, 12:33 am

திருநெல்வேலியை அடுத்த கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கண்டிகைப்பேரி பா.ராமசாமி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் கட்டும் பணி கடந்த 2021 ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் ரூ.38.95 கோடியில் 100 படுக்கை அறைகளுடன் இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, கண்டிகைப்பேரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் கலந்து கொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினா்.