திருநெல்வேலியை அடுத்த கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கண்டிகைப்பேரி பா.ராமசாமி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் கட்டும் பணி கடந்த 2021 ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் ரூ.38.95 கோடியில் 100 படுக்கை அறைகளுடன் இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, கண்டிகைப்பேரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் கலந்து கொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினா்.
தொடர்புடையது

ஆமை வேகத்தில் நடைபெறும் திருச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி!

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

பாா்வையாளா்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாத அரசு மருத்துவமனை

பழனி அரசு மருத்துவமனையில் விரிவாக்கக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

