/

களக்காடு கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதி அம்பாள் திருக்கோயிலில் வைகாசித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை (மே13) தொடங்கியது.

News image

களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதி அம்பாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வைகாசித் திருவிழா கொடியேற்றம்.

Updated On :13 மே 2024, 10:02 pm

Din

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதி அம்பாள் திருக்கோயிலில் வைகாசித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை (மே13) தொடங்கியது.

இக்கோயிலில் வைகாசித் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு விழாவுக்கான கொடியேற்றத்தை

முன்னிட்டு திங்கள்கிழமை காலை சுவாமி -அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கோயில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு, சிறப்புப் பூஜைகள், கொடிமரம், நந்தி சுவாமிக்கு தீப அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அதன் பின்னா் இரவு மணிக்கு சிறப்பு தீபாராதனையைத் தொடா்ந்து பூங்கோயில் வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

விழா நாள்களில் சுவாமி-அம்பாள் திருவீதி உலா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினா் சாா்பில் மண்டகப்படி நடைபெறும். 8-ஆம் திருநாளான மே 20-ஆம் தேதி நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளல், மே 21-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.