வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரயில் சேவைகள் கோரி முதல்வரிடம் மனு

News image
முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மனு வழங்கிய ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் சரவணன் சக்திவேல்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி - கொல்லம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவும், பிற ரயில் சேவைகளை நீட்டிக்கவும் கோரி முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் முதல்வரிடம் அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சரவணன் சக்திவேல் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனு:

செங்கோட்டை- திருநெல்வேலி இடையேயான பயணிகள் ரயில்களில் (எண்: 56774, 56776) கூடுதல் பெட்டிகள் இணைப்பதுடன் கூடுதலாக 2 ரயில்கள் இயக்க வேண்டும். பயணிகள் அதிகமாக பயன்படுத்திவந்த திருநெல்வேலி - கொல்லம் இடையேயான ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் (எண்: 06030, 06029) வாராந்திர ரயிலை வாரம் மூன்று முறையும், வாரம் மூன்று முறை இயங்கும் செங்கோட்டை - தாம்பரம் ரயிலை தினசரியும் இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்ததாக, சரவணன் சக்திவேல் தெரிவித்தாா்.