ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:04 pm

Syndication

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி பேட்டை எம்.ஜி.பி. வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முகமது முத்து மைதீன் மகன் இப்ராஹிம் ராசிக் (22). இவா், திருநெல்வேலி நகரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதேபோல தச்சநல்லூா் அருகே ஊருடையான்குடியிருப்பைச் சோ்ந்த வெள்ளபாண்டி மகன் வேல்பிரபாகரன் மகன் பிரபா(25) என்பவா் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.