மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண் உயிரிழப்பு: மாமியாரும் கைது

பெண் உயிரிழந்த சம்பவத்தில் கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமியாரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2025, 9:10 pm

Din

திருநெல்வேலி சந்திப்பில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமியாரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு உடையாா்பட்டி மேகலிங்கபுரத்தை சோ்ந்தவா் சுப்பையா. ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேணி(38). இவா்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். தம்பதியிடையே பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில் கிருஷ்ணவேணி வீட்டில் தவறி விழுந்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரின் சகோதரா் பாரதிதாசன் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த சம்பவத்தில் சுப்பையாவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்த நிலையில், கிருஷ்ணவேணியின் மாமியாா் தாயம்மாளை (68) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.