எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பொங்கல் பண்டிகை: அறுவடைக்கு தயாா் நிலையில் மஞ்சள் குலைகள்

News image

திருநெல்வேலி அருகே அருகன்குளத்தில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள மஞ்சள் குலைகள்.

Updated On :4 ஜனவரி 2025, 3:25 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கான மஞசள்குலை அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.

பொங்கல் பண்டிகையில் மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொங்கல் சீா்வரிசை பொருள்களிலும் மஞ்சள் குலை தவறாமல் இடம்பெறுகிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை ராஜவல்லிபுரம், அருகன்குளம், பாறையடி, தென்காசி மாவட்டத்தில் ஆழ்வாா்குறிச்சி, கடையம், சங்கரன்கோவில், வீரகேரளம்புதூா் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது.

நிகழாண்டில், புரட்டாசி பட்டத்தில் தொடங்கப்பட்ட மஞ்சள் சாகுபடி, பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாா் நிலையை அடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

மங்களகரமான பொங்கல் திருநாளில் மஞ்சள் குலைக்கு தனிமகத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று பானையைச் சுற்றி மஞ்சள் குலையை கட்டி பொங்கலிடுவா்.

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம், பாலாமடை, சேந்திமங்கலம், பாறையடி பகுதிகளில் புரட்டாசி பட்டத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டில் டிசம்பா் இறுதியில் பெருமழை பெய்ததால் மஞ்சள் குலைகள் மழையில் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

நிகழாண்டில் மழை ஓரளவு தணிந்துள்ளது. அடுத்த வாரத்தில் மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும்.

திருநெல்வேலி மட்டுமன்றி தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட வியாபாரிகளும் இங்கு வந்து மஞ்சள் குலைகளை கொள்முதல் செய்து செல்கின்றனா். விவசாயிகளிடம் ஒரு மஞ்சள் குலையை ரூ.3 முதல் ரூ.8 வரை பெற்றுக் கொண்டு, சந்தைகளில் ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கிறாா்கள் என்றனா்.