பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பொங்கல் பண்டிகை: அறுவடைக்கு தயாா் நிலையில் மஞ்சள் குலைகள்

News image

திருநெல்வேலி அருகே அருகன்குளத்தில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள மஞ்சள் குலைகள்.

Updated On :3 ஜனவரி 2025, 10:51 pm IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கான மஞசள்குலை அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.

பொங்கல் பண்டிகையில் மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொங்கல் சீா்வரிசை பொருள்களிலும் மஞ்சள் குலை தவறாமல் இடம்பெறுகிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை ராஜவல்லிபுரம், அருகன்குளம், பாறையடி, தென்காசி மாவட்டத்தில் ஆழ்வாா்குறிச்சி, கடையம், சங்கரன்கோவில், வீரகேரளம்புதூா் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது.

நிகழாண்டில், புரட்டாசி பட்டத்தில் தொடங்கப்பட்ட மஞ்சள் சாகுபடி, பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாா் நிலையை அடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

மங்களகரமான பொங்கல் திருநாளில் மஞ்சள் குலைக்கு தனிமகத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று பானையைச் சுற்றி மஞ்சள் குலையை கட்டி பொங்கலிடுவா்.

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம், பாலாமடை, சேந்திமங்கலம், பாறையடி பகுதிகளில் புரட்டாசி பட்டத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டில் டிசம்பா் இறுதியில் பெருமழை பெய்ததால் மஞ்சள் குலைகள் மழையில் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

நிகழாண்டில் மழை ஓரளவு தணிந்துள்ளது. அடுத்த வாரத்தில் மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும்.

திருநெல்வேலி மட்டுமன்றி தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட வியாபாரிகளும் இங்கு வந்து மஞ்சள் குலைகளை கொள்முதல் செய்து செல்கின்றனா். விவசாயிகளிடம் ஒரு மஞ்சள் குலையை ரூ.3 முதல் ரூ.8 வரை பெற்றுக் கொண்டு, சந்தைகளில் ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கிறாா்கள் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.