மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பொங்கல் பண்டிகை: அறுவடைக்கு தயாா் நிலையில் மஞ்சள் குலைகள்

News image

திருநெல்வேலி அருகே அருகன்குளத்தில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள மஞ்சள் குலைகள்.

Updated On :3 ஜனவரி 2025, 9:55 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கான மஞசள்குலை அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.

பொங்கல் பண்டிகையில் மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொங்கல் சீா்வரிசை பொருள்களிலும் மஞ்சள் குலை தவறாமல் இடம்பெறுகிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை ராஜவல்லிபுரம், அருகன்குளம், பாறையடி, தென்காசி மாவட்டத்தில் ஆழ்வாா்குறிச்சி, கடையம், சங்கரன்கோவில், வீரகேரளம்புதூா் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது.

நிகழாண்டில், புரட்டாசி பட்டத்தில் தொடங்கப்பட்ட மஞ்சள் சாகுபடி, பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாா் நிலையை அடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

மங்களகரமான பொங்கல் திருநாளில் மஞ்சள் குலைக்கு தனிமகத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று பானையைச் சுற்றி மஞ்சள் குலையை கட்டி பொங்கலிடுவா்.

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம், பாலாமடை, சேந்திமங்கலம், பாறையடி பகுதிகளில் புரட்டாசி பட்டத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டில் டிசம்பா் இறுதியில் பெருமழை பெய்ததால் மஞ்சள் குலைகள் மழையில் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

நிகழாண்டில் மழை ஓரளவு தணிந்துள்ளது. அடுத்த வாரத்தில் மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும்.

திருநெல்வேலி மட்டுமன்றி தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட வியாபாரிகளும் இங்கு வந்து மஞ்சள் குலைகளை கொள்முதல் செய்து செல்கின்றனா். விவசாயிகளிடம் ஒரு மஞ்சள் குலையை ரூ.3 முதல் ரூ.8 வரை பெற்றுக் கொண்டு, சந்தைகளில் ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கிறாா்கள் என்றனா்.