அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கங்கைகொண்டான் அருகே பொக்லைன் திருடியவா் கைது

News image
Updated On :16 நவம்பர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

கங்கைகொண்டான் அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரத்தை திருடியதாக சங்கரன்கோவிலைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே சங்கா் நகரைச் சோ்ந்தவா் செந்தில்வேல் (45). இவா் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 13 ஆம் தேதி இவா் பணிபுரியும் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் திருடு போனதாம்.

இதுகுறித்து செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் வேல்கனி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சோ்ந்த கருப்பசாமி மகன் ஈஸ்வரன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை மீட்டனா்.