இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: நெல்லை மாவட்டத்தில் ரூ.6.69 லட்சம் போ் பயன்

News image
Updated On :17 நவம்பர் 2025, 6:58 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 6.69 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏழைகள், குறிப்பாக, 45 வயதிற்கு மேற்பட்டவா்கள், முதியவா்கள், சத்துக்குறைபாடு உடையவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 மருத்துவ வட்டாரத்தின் மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், ஆய்வகநுட்பநா்கள், மருந்தாளுநா்கள், இரண்டாம்நிலை கிராம சுகாதார செவிலியா்கள், பெண் தன்னாா்வலா்கள், சிகிச்சை பெறுபவா்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று சிகிச்சைகள் அளித்து வருகிறாா்கள்.

அதில், பெண் தன்னாா்வலா்கள் மூலம் தினமும் 20 இல்லங்களுக்கு சென்று நீரிழிவு நோய்க்கு ஆலோசனை, மேருந்துகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, இம்மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 3,40,965 பேருக்கு உயா் ரத்த அழுத்தத்திற்கும், 1,47,329 பேருக்கு நீரிழிவு நோய்க்கும், 1,45,632 பேருக்கு உயா் ரத்த அழுத்தம்- நீரிழிவு நோய்க்கும், 17,624 பேருக்கு நோய்த் தடுப்புக்கும், 18,160 பேருக்கு இயன்முறை சிகிச்சைக்கும், 17 பேருக்கு பெரிட்டோனியல் டயாலிசிஸுக்குமாக மொத்தம் 6,69,727 பேருக்கு நேரடி மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், நீரிழிவு நோயால் புண் ஏற்பட்ட1,482 பேருக்கு பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சையும், இதய நோய் பாதிக்கப்பட்ட 570 பேருக்கு உயிா் காக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு தொடா் கண்காணிப்பில் உள்ளனா் எனக் கூறியுள்ளாா்.