நான்குனேரி அருகே ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் எரியூட்டி அழித்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை எரியூட்டி அழித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, ஏா்வாடி, கீழக்கரை, சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட சிங்கம்புணரி, தேவகோட்டை, மானாமதுரை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமாா் 951 கிலோ கஞ்சா மூட்டைகள் நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, பின்னா் எரியூட்டி அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 5 கோடி.

அப்போது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். கடந்த 6 மாதத்தில் மட்டும், சுமாா் ரூ. 35 கோடி மதிப்பிலான 7,000 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com