/

கங்கைகொண்டான் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி அளிப்பு

கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 149 மாணவா்-மாணவிகளில், முதல்கட்டமாக 64 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:46 pm

Syndication

கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 149 மாணவா்-மாணவிகளில், முதல்கட்டமாக 64 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

கங்கைகொண்டான் ஊராட்சித் தலைவி கவிதா பிரபாகரன் தலைமை வகித்தாா். மானூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் மாலதி முன்னிலை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் அருள்மணி மிதிவண்டிகளை வழங்கினாா். பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்27ஞ்ஹய்ஞ்ஹண்

கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பங்கேற்றோா்.