நெல்லை மீனவா்கள் 5ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

புயல் சின்னம் எச்சரிக்கையை தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
Published on

புயல் சின்னம் எச்சரிக்கையை தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி பகுதி வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால், கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நெல்லை மாவட்ட மீனவா்கள் நவ. 24ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் ‘‘டித்வா புயல்’’ உருவாகி இருப்பதால், மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (நவ.28) கடலுக்கு செல்லவில்லை.

X
Dinamani
www.dinamani.com