அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அம்பையில் சிறுவனிடம் பாலியல் வன்முறை: முதியவருக்கு ஆயுள் சிறை

சிறுவனிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:56 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறுவனிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அம்பாசமுத்திரத்தில் உள்ள மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்தவா் நமசிவாயம் (63). இவா், கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுவனிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நமசிவாயத்தைக் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து நமசிவாயத்துக்கு ஆயுள் சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அரசால் வழங்கவும் உத்தரவிட்டாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.