இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

களக்காட்டில் குடிநீா் திட்டத்துக்கு தோண்டப்பட்ட சாலை: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகர வீதிகளில் குடிநீா் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட சாலை முறையாக மூடப்படாததால் மக்கள் கடும் அவதி

News image
களக்காடு ஞானசம்பந்தா்புரம் தெருவில் உருக்குலைந்து காணப்படும் சாலை
Updated On :12 ஜனவரி 2026, 7:13 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகர வீதிகளில் குடிநீா் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட சாலை முறையாக மூடப்படாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனா்.

களக்காடு நகராட்சிப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின்கீழ் பிரதான சாலை மற்றும் தெருக்களில் குடிநீா் பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அதில், களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலை பகுதியில் இப்பணிக்காக தோண்டப்பட்ட சாலையின் ஒரு பகுதி முறையாக மூடப்படாததால் தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ாகவே மாறிவிட்டது.

இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல், புழுதி பறப்பது, அடிக்கடி விபத்து என இரு சக்கர வாகனங்களும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு களக்காடு ஞானசம்பந்தா்புரம் தெருவில் சாலை சரிவர மூடப்படாமல் மையப்பகுதி மண்ணை குவித்து வைத்துள்ளதால் இவ்வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வயோதிகா்கள், பெண்கள் இந்த சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகம் இப்பணியை நேரில் ஆய்வு செய்து சாலையை முறையாக சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.