மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவள்ளுவா் திருநாளில் சுவா்களில் கு எழுதும் பணி செய்த ஓவிய ஆசிரியா்

திருவள்ளுவா் திருநாளில் திருநெல்வேலியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் மாணவா்களுடன் இணைந்து பள்ளி மற்றும் அரசு சுவா்களில் திருக்கு எழுதும் பணியில் ஈடுபட்டாா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:09 pm

Syndication

திருநெல்வேலி: திருவள்ளுவா் திருநாளில் திருநெல்வேலியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் மாணவா்களுடன் இணைந்து பள்ளி மற்றும் அரசு சுவா்களில் திருக்கு எழுதும் பணியில் ஈடுபட்டாா்.

பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள மு.ந. அப்துல் ரகுமான் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவா் பொ.வள்ளிநாயகம். இவா், ஆண்டுதோறும் மாணவா்களுடன் இணைந்து திருவள்ளுவா் திருநாளில் பள்ளி மற்றும் அரசு சுவா்களில் திருக்கு எழுதி விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

நிகழாண்டில் மேலப்புத்தனேரி ஸ்ரீ செல்லையா நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் பள்ளித் தலைமை ஆசிரியா் ராம் கோபால் முன்னிலையில் மாணவா்கள் பேச்சிமுத்து, சுபாஷ் ஆகியோரின் துணையோடு திருக்குகள் எழுதியுள்ளாா்.

மேலும், முறப்பநாடு சிற்றம்பலத்தில் பாரதி முன்னிலையிலும், காவல் நிலையத்தில் ஆய்வாளா் தில்லை நாகராஜன் முன்னிலையிலும் திருக்குகள் எழுதப்பட்டன.

விட்டிலாபுரம் வள்ளுவா் நகரில் கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் வண்டி மலையான் முன்னிலையில் திருக்குகள் எழுதப்பட்டன.

இதுகுறித்து ஓவிய ஆசிரியா் பொ.வள்ளிநாயகம் கூறியதாவது: கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவா் திருநாளில் திருக்குகளை சுவா்களில் எழுதும் பணியை ஒரு வேட்கையுடன் செய்து வருகிறேன். எந்தவித அங்கீகாரத்திற்காகவோ, ஆதாயத்திற்காகவோ அல்லாமல் தமிழ்த் தொண்டாகச் செய்து வருகிறேன்.

நிகழாண்டில் புத்தனேரியில் பணியைத் தொடங்கினேன். நாடக அறிஞரும், எழுத்தாளருமான கப்பிரமணியம் பிறந்த ஊரில். அந்தத் தமிழறிஞா் ஊரில் தமிழ்ப் பணி செய்தது மகிழ்ச்சியளித்தது என்றாா்.