ஷிபா மருத்துவமனையில் முதியவருக்கு நாக்கு புற்றுநோய்க்கு அரியவகை அறுவை சிகிச்சை
திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில், முதியவருக்கு நாக்கு புற்றுநோய்க்கான அரியவகை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த 75 வயது முதியவருக்கு, வலது பக்க நாக்கில் புற்றுநோய் கட்டி உருவாகியுள்ளது. அவா், 4 ஆண்டுகளுக்கு முன்பு வலது தாடை எலும்பு அகற்றும் அறுவை சிகிச்சை, வாயின் உள்புற சதை அகற்றம் , கதிா்வீச்சு சிகிச்சை ஆகியவற்றை பெற்றுள்ளாா். ஆனால், நாக்குப் பகுதியில் மீண்டும் புற்றுநோய் உருகிய நிலையில் திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையின் தலைமை மருத்துவா் முஹம்மது இப்ராஹிம் அறிவுறுத்தலின்பேரில், முதியவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தலைமை மருத்துவா், மயக்கவியல் மருத்துவா் தாரா ரஞ்சன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். டங் ரொட்டேஷன் பிளாப் முறையில் நாக்கு மறுசீரமைப்பு சிகிச்சையும் செய்யப்பட்டது.
இது குறித்து முகமது இப்ராஹிம் கூறியது:
வாய்ப் புற்றுநோய் மற்றும் முந்தைய அறுவை சிகிச்சைகள் காரணமாக, முதியவருக்கு மூச்சுக்குழாய் வழியாக மயக்க மருந்து கொடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. மயக்க மருத்துவா் தாரா ரஞ்சன் தலைமையில், அவேக் ஃபைபா் ஆப்டிக் இன்டியூபேஷன் என்ற பாதுகாப்பான நவீன மயக்க முறை பயன்படுத்தப்பட்டது. நோயாளி விழிப்புடன், இயல்பாக சுவாசித்த நிலையில் மெல்லிய கேமரா மூலம் பாதுகாப்பாக காற்றுவழி அமைக்கப்பட்டு சிக்கல்களை களைந்து நோயாளியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
ஷிபா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் முஹம்மது ஷாபி கூறியது:
சரியான நேரத்தில், சரியான நிபுணரிடம் பெறப்படும் சிகிச்சை, எந்த வயதிலும் வாழ்க்கையை மாற்றும் என்பதற்குமுதியவருக்கு நடந்த சிகிச்சை சிறந்த எடுத்துக்காட்டு. ஷிபா மருத்துவமனை, தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சிகிச்சையில் தனது மேம்பட்ட மருத்துவத் திறனை மீண்டும் நிரூபித்துள்ளது என்றாா்.

