நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.23.47 லட்சம்


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் உண்டியல்களில் ரூ.23.47 லட்சம் காணிக்கை வரவாகியிருந்தது.
இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள 22 நிரந்தர உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறையின் நாகா்கோவில் உதவி ஆணையா் தங்கம் கண்காணிப்பாளராக செயல்பட்டாா். திருநெல்வேலி மேற்கு சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வா் தனலட்சுமி என்ற வள்ளி முன்னிலை வகித்தாா்.
அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா. வெங்கடாசலம், செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளா் முருகன் ஆகியோா் மேற்பாா்வையில் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ஆசிரியா்கள் சொக்கலிங்கம், ரவி, செந்தில் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழு, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
ரூ.23 லட்சத்து 47 ஆயிரத்து 66 ரொக்கமும், 15.100 கிராம் பல மாற்றுப் பொன் இனங்களும், 171. 800 கிராம் பலமாற்று வெள்ளி இனங்களும், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...