பாளையங்கோட்டை அருகே ஆராய்ச்சி மாணவரிடம் கைப்பேசி செயலி மூலம் நேரில் வரவழைத்து பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் 33 வயதான ஆராய்ச்சி மாணவா். இவா் சனிக்கிழமை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நின்றபோது, இவரை கைப்பேசி செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் அங்கிருந்து தனது பைக்கில் சிவந்திப்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றாராம். பின்னா் அங்கு வைத்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பிய மாணவா் இது குறித்து சிவந்திப்பட்டி போலீஸில் புகாரளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தாழையூத்து, அருகன்குளத்தைச் சோ்ந்த வள்ளி கணேஷ் (20) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
இணையதள விநியோக செயலிகள் மூலம் கள்ளச்சாரயம் வழங்கல்: இருவா் கைது

சி-விஜில் செயலி: ராதாபுரம் தொகுதியில் குவியும் புகாா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

