மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (54). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சைக்கிளில் சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த கும்பல் இவரை வழிமறித்து 4 கிராம் தங்க மோதிரம், கைப்பேசி, மற்றும் ரூ.6,000 பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த முகமது அனாஸ் (25), மகிழ்வண்ணநாதபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (26) மற்றும் பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட பொருள்களை மீட்டனா்.