மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 8:09 pm

பாளையங்கோட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (54). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சைக்கிளில் சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த கும்பல் இவரை வழிமறித்து 4 கிராம் தங்க மோதிரம், கைப்பேசி, மற்றும் ரூ.6,000 பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த முகமது அனாஸ் (25), மகிழ்வண்ணநாதபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் (26) மற்றும் பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட பொருள்களை மீட்டனா்.