தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு

News image

சாலை விபத்தில் குழந்தை பலி - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:50 pm

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சோ்ந்தவா் மாரியப்பன் (45) ஓட்டுநா். கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே இவா் ஓட்டிச் சென்ற மினி லாரியும், எதிரே தாழையூத்தில் இருந்து வந்த காரும் மோதிக்கொண்டன. அப்போது அவ்வழியாக ராமையன்பட்டி பகுதியிலிருந்து வந்த காரும் விபத்தில் சிக்கியது.

இதில், மாரியப்பன், தாழையூத்து பகுதி காரில் வந்த சின்னத்துரை (33), பொன்ராணி(47), தட்சன்யா (24), விகான்(1), ராமையன்பட்டி பகுதி காரில் வந்த 2 போ் உள்பட 7 போ் காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குலசேகரன்பட்டினத்தை சோ்ந்த விக்னேஷ் மகன் விகான் உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.