நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் மகளிர் கூடைப்பந்து போட்டி

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி  பொறியியல் கல்லூரியில்,  மாவட்ட கூடைப்பந்து  கழகம்,  தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகத்துடன் இணைந்து நடத்தும் மாநில
Updated on
1 min read

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி  பொறியியல் கல்லூரியில்,  மாவட்ட கூடைப்பந்து  கழகம்,  தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகத்துடன் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. 
18 வயதுக்குள்பட்டோருக்கான இப்போட்டி தொடக்க நிகழ்ச்சியில், என்.ஐ. பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமாள்சாமி குத்துவிளக்கேற்றினார். பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரித் தலைவர் பொன். ராபர்ட் சிங் தலைமை வகித்தார். மாநில கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்தியன் போட்டிகளைத் தொடங்கிவைத்தார். 
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் தியாகராஜன், வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா, மாவட்ட கூடைப் பந்தாட்டக் கழகத் தலைவர் சவரிமுத்து, செயலர் பிரேம், நிர்வாகிகள் நெல்லையப்பன், டென்னிசன்,  ஆஸ்டின், சாமுவேல்,  மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சாம்சன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை ஒருங்கிணைக்கின்றனர். போட்டிகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com