
கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி
நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை விளக்கப் பேரணி செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை விளக்கப் பேரணி செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் பொறுப்புக்காக கவனிக்கும் கிராமங்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்திலும் பணிகளைப் புறக்கணித்து 100 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கோரிக்கை விளக்கப் பேரணி நடத்தினர்.
இப்பேரணிக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க குமரி மாவட்டச் செயலர் நாகேஷ்வர காந்த் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ஈஸ்வரி உள்பட திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






