அழகியபாண்டியபுரத்தில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் புதன்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோவாளை வட்டம், அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிக்கான மனுநீதித் திட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி குறத்தியறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
அழகியபாண்டியபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ஜூன்14 ஆம் தேதி நடைபெற்ற மனுநீதி திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின் போது பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள் இந்த இரண்டாம் கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், இந்நிகழ்ச்சியில் துறைவாரியாக அரசு நலத் திட்ட விவரங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும்: பாக். பிரதமர்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

ஆடிஷன் விடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்த நடிகை காவ்யா அறிவுமணி!

சூர்யா - 50! இயக்குநர் நெல்சனுடன் பேச்சுவார்த்தை?
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


