அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தாத வரை பெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வராது: பாஜக மகளிர் அணி தேசியத் தலைவி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வராதவரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றார் பாஜக மகளிர் அணி தேசிய தலைவி விஜயா ரகட்கர்.

Updated On :24 ஜூலை 2018, 12:51 am IST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வராதவரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றார் பாஜக மகளிர் அணி தேசிய தலைவி விஜயா ரகட்கர்.
நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாஜக மகளிர் அணிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் ஆட்சி செய்த தமிழகத்தில் மக்களின் 3 ஆவது பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. அடுத்த தேர்தலில், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். 
மத்திய அரசு, மக்கள் நலத் திட்டங்களை அதிகமாக கொண்டு வந்துள்ளது. பெண்கள் ஆரோக்கியம் சார்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முத்ரா வங்கி திட்டத்தில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு 26 மாத விடுப்பு வழங்குவது போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பாஜக தமிழகத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.  
பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது. சிறுமிகளை பாலியல் கொடுமை செய்தால் தண்டிக்கும் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலாகாதவரை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றார்  அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.