பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் அளித்துள்ள மனு: பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் தரமானதாக இல்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரெடிமேட் பீம்கள் பயன்படுத்தி இரும்புத் தூண்கள் மீது அவை பொருத்தப்பட்டு அதற்கு மேல் கான்கிரீட் போடும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்த மேம்பாலம் அதிகஎடை கொண்ட லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்றால் இடிந்து விடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த பாலங்கள் சரியான முறையிலும், தரமான முறையிலும் கட்டப்படவில்லை என்பதை அறிந்தோம்.
எனவே, மேம்பாலப் பணிகளை தரமானதாக அமைக்க வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், நாகர்கோவில் நகர காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ், மாவட்டத் துணைத் தலைவர் மகேஷ்லாசர், வட்டாரத் தலைவர்கள் அசோக்ராஜ், சேவாதளம் எனல்ராஜ், வழக்குரைஞர் பிரியதர்ஷினி, மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்!

அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!
தொடர் மின்வெட்டு, போராடும் மக்கள்! யார்தான் காரணம்? என்னதான் தீர்வு?
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics


