தேசிய அளவில் கண் மருத்துவர்கள், பயிற்சி மாணவர்களுக்கான கண் பரிசோதனையில் நவீன கண்டுபிடிப்புகள் குறித்து கன்னியாகுமரியில் பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கிற்கு நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனைத் தலைவர் எஸ்.எம்.பெஜான்சிங் தலைமை வகித்தார். பெஜான்சிங் கண் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிராயன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். பயிலரங்கினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.
பயிலரங்கு மலரை கல்லூரி நிர்வாகமேலாளர் டாக்டர் ருஸிதா வெளியிட எஸ்.பி. பெற்றுக் கொண்டார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் திருவேங்கட செந்தில்குமார் பங்கேற்றுப் பேசினார். பயிலரங்கில் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப் பட்ட அதி நவீன கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கண் மருத்துவர்கள், கண் கண்ணாடி நிபுணர்கள், பார்வை குறைவு நிபுணர்கள், பயிற்சி மாணவர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நேசன் பெரைரா ஆண்டறிக்கை வாசித்தார். சலீல் அகமது வரவேற்றார். முகிசீம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

காவல் துறை வாகனங்கள்: ஆணையா் அமல்ராஜ் ஆய்வு

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


