சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பிஎஸ்என்எல் நிறுவன சேவை குறைபாடு: எம்எல்ஏ கண்டனம்

குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவன தரைவழி மற்றும் செல்லிடப்பேசி இணைப்புகளில் நிலவும்

Updated On :23 ஜனவரி 2019, 5:52 am IST

குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவன தரைவழி மற்றும் செல்லிடப்பேசி இணைப்புகளில் நிலவும் குறைபாடுகளுக்கு பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோதங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
   உலக அளவில் தொழில்நுட்பம் பல பரிணாமங்களில் ஜொலித்து வருகையில் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சரியாக செயல்பட இயலாதது,  பல சந்தேகங்களை உருவாக்குகிறது. எற்கெனவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த தரைவழி தொலைபேசி இணைப்புகள் தரமற்ற சேவையால் மதிப்பிழந்து  விட்டது. தற்போது செல்லிடப்பேசி சேவையும் அதே நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
  தரமற்ற சிக்னல், ஒலி தெளிவின்மை, இடையிடையே அழைப்பு துண்டிக்கப்படுதல், வேகமற்ற இணைய தகவல் பரிமாற்றம் என அனைத்திலும்  மோசமான சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை வீழ்த்தும் இத்தகைய முயற்சிகளை கைவிட்டுவிட்டு, சேவை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தனியாரை மிஞ்சும் சேவைகளை பி.எஸ்.என்.எல். மூலம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.