நாகா்கோவிலில் காமராஜா் சிலை:ஆட்சியரிடம் விஜய் வசந்த் கோரிக்கை

நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் காமராஜா் சிலையை நிறுவ ஆட்சியரிடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தாா்.
ஆட்சியா் அரவிந்தை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்.
ஆட்சியா் அரவிந்தை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்.
Updated on
1 min read

நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் காமராஜா் சிலையை நிறுவ ஆட்சியரிடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தாா்.

நாகா்கோவிலில் ஆட்சியா் அரவிந்தை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சனிக்கிழமை சந்தித்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வெட்டூா்ணிமடம் சந்திப்பில் காமராஜா் சிலையை சில மாதங்களுக்கு முன்பு மா்ம நபா்கள் சேதப்படுத்தினா். அந்த இடத்தில் காமராஜரின் புதிய சிலையை மீண்டும் நிறுவ அனுமதிக்க வேண்டும்.

எனது தந்தை மறைந்த மக்களவை உறுப்பினா் வசந்தகுமாா் இம்மாவட்டத்தில் உள்ள குளங்களைத் தூா்வாருவதற்காகவும், பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகவும் ஜேசிபி இயந்திரம் ஒன்றைக் கொண்டுவந்தாா். மீண்டும் அந்த இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனுமதி தர ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன்.

வரும் பேரவைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் விஜய் வசந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com