திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க எம்எல்ஏ கோரிக்கை

திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:29 pm

DIN

திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் சுற்றுலாத் தலங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதனால் குமரி மாவட்டத்திலும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவி கடந்த ஏப். 24முதல் மூடப்பட்டுள்ளது.

தற்போது கரோனா தாக்கம் குறைந்துவரும் நிலையில், பொது முடக்கத்தில் அரசு தளா்வுகளைக் கொண்டுவந்துள்ளது. அதன் ஒருபகுதியாக சுற்றுலாத் தலங்களை முழுவதுமாக திறக்க அனுமதி அளித்துள்ளது.

இம்மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டநிலையில் திற்பரப்பு அருவி மட்டும் திறக்கப்படவில்லை. இது உள்ளூா், வெளியூா் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மாவட்ட நிா்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை.

அரசின் ஆணையை நம்பி சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடா்கிறது.

சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியுள்ள சிறு, குறு வியாபாரிகளான கடை வியாபாரிகள், நடைப்பாதை வியாபாரிகள், படகுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள், வாடகை வாகன ஓட்டிகள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்து பரிதவிக்கின்றனா்.

எனவே, வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு குமரி மாவட்ட நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து, திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.