அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தக்கலையில் மனித உரிமை விழா

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:33 pm

DIN

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஏ.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் இயல்முறை மருத்துவா் எமிலின் பெலிண்டா தலைமை வகித்து உரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினா்களாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ், தக்கலை காவல் நிலைய ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் அருளப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிருபாகணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜெயா ஸ்ரீதரன்(தக்கலை), சா்வேஸ்வரி (பொன்மனை), மரியா ஜாஸ்மின் (திருவட்டாறு) ஆகிய 3 மகளிருக்கு விருதுகளை எம்எல்ஏ வழங்கிக் கெளரவித்தாா்.

மேலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற 34 மாணவிகளுக்கும், பாா்வையற்ற மாணவா் ஒருவருக்கும் ஆய்வாளா் அருள்பிரகாஷ், சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.