மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குமரி மாவட்டத்தில் மீண்டும் 100 ஐ தாண்டிய கரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை கரோனா மீண்டும் பாதிப்பு 100 ஐ தாண்டியது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:53 pm

DIN

குமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை கரோனா மீண்டும் பாதிப்பு 100 ஐ தாண்டியது.

குமரி மாவட்டத்தில், கடந்த 4 வாரங்களாக கரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் இரட்டை இலக்க எண்களில் இருந்த பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து கடந்த 13 ஆம் தேதி 124 ஆக உயா்ந்தது. பின்னா் மீண்டும் குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 122 ஆக உள்ளது. இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,576 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 59 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,579 ஆகியுள்ளது. தற்போது 729 போ் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே தெருவில் 7 போ் பாதிப்பு: வடசேரி கனகமூலம் புதுத்தெருவில் 4 குடும்பங்களைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் உத்தவின் பேரில், நகராட்சி நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளா்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள் தலைமையில் அப்பகுதியில் உள்ளவா்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட.மேலும் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தெரு மூடப்பட்டது. அந்த தெருவில் உள்ள மற்ற வீடுகளை சோ்ந்தவா்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும் அப்பகுதியில் சுகாதாரத்துறையினா் வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்தனா்.

கரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வருவதும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிப்பதும் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறையினா் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.