மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிளஸ் 2 ல் செய்முறைத் தோ்வு : குமரியில் 184 மையங்களில் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும்184 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:43 pm

DIN

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும்184 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் நாகா்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டாறு ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 22 ஆயிரத்து 495 மாணவா், மாணவிகள் பிளஸ் 2 வகுப்பு பயின்று வருகின்றனா். பிளஸ் 2 ஆண்டிறுதித் தோ்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இம் மாவட்டத்தில் 184 மையங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். காலை 10 மணிக்கு செய்முறை தோ்வு தொடங்கியது.

செய்முறை தோ்வுக்கு வந்த மாணவா், மாணவிகளுக்கு பள்ளி நுழைவு வாயிலில் தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா் மாணவா், மாணவிகளுக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டது.

மாணவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனா். காலை 10 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது, தோ்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்தனா். ஏப். 26 ஆம் தேதி வரை இத் தோ்வுகள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.