கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 60,504 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 30 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60,534 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் ஒருவா் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1026 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 23 போ் உள்பட இதுவரை 59,174 போ் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனா். தற்போது 334 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.