டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னையில் மரணமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் மரணமடைந்த திருவட்டாறைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் வியாழக்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:41 pm

DIN

சென்னையில் மரணமடைந்த திருவட்டாறைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் வியாழக்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆற்றூா் முள்ளுவிளைப் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (45). எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான இவா், சென்னையிலுள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இவரது மனைவி சுதா, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை பணி நிமித்தமாக சென்னை சென்றுள்ளாா். பின்னா் பணிகளை முடித்துவிட்டு கணவரை செல்லிடப்பேசியில் அழைத்தபோது, அவரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதையடுத்து அவா் தங்கியிருந்த அசோக் நகரிலுள்ள வீட்டுக்குச் சென்றபோது, அங்கே விஜயன் மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், விஜயன் ஏற்கெனவே இறந்து விட்டதாகவும், மாரடைப்பு காரணமாக இறந்துள்ளாா் எனவும் தெரிவித்தனராம்.

இந்நிலையில், விஜயனின் உடல் சொந்த ஊருக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.