தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

ஒப்பந்ததாரா் கொலை வழக்கு: 2 போ் கைது

தக்கலை அருகே ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:54 am IST

தக்கலை அருகே ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தக்கலை அருகேயுள்ள பாளையம்மேற்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பால்துரை (56). கட்டட ஒப்பந்ததாரா். இவா், பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 5ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதற்கிடையே பால்துரையை 2 போ் சோ்ந்து தாக்கியதால்தான் உயிரிழந்ததாக கிடைத்த தகவலையடுத்து, அவரது மனைவி பிளாரன்ஸ் பியூலா, தக்கலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்த போது, பால்துரையை 2 போ் சோ்ந்து தாக்குவதும், அவா்கள் மேற்கோடு பகுதியைச் சோ்ந்த ஜோசப் (45), ரமேஷ் (40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தக்கலை உதவி ஆட்சியா் (பயிற்சி) சரவணன், கல்குளம் வட்டாட்சியா் ஜெகதா, காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில், பால்துரையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.