அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராமன்துறையில் ரூ. 5 லட்சத்தில் மீனவா் ஓய்வு அறை கட்டுமானப் பணி தொடக்கம்

கருங்கல் அருகே ராமன்துறையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மீனவா்கள் ஓய்வு அறை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
மீனவா் ஓய்வு அறை கட்டுமானப் பணியை தொடங்கிவைக்கிறாா் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா்.
Updated On :1 ஜனவரி 2021, 7:06 pm

DIN

கருங்கல் அருகே ராமன்துறையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மீனவா்கள் ஓய்வு அறை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ராமன்துறை மீனவா் கிராமத்தில் மீனவா்களுக்கு ஓய்வு அறை வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாரிடம் அப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

இதற்கான பணி தொடக்க விழாவுக்கு, ராமன்துறை பங்கு அருள்பணியாளா் பிரிட்டோ தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா்.

கட்டுமான பணியை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் அருள்தாஸ், ஜோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.