குரூப்-1 தோ்வு: குமரியில் 18 மையங்களில் 2677 போ் தோ்வு எழுதினா்
குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் குரூப் - 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 2763 போ் தோ்வு எழுதவில்லை.


குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் குரூப் - 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 2763 போ் தோ்வு எழுதவில்லை.
தமிழகத்தில், துணை ஆட்சியா் , துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்- 1 முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் தெ.தி. இந்து கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, புனித சிலுவை கல்லூரி உள்ளிட்ட 18 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை தோ்வு நடைபெற்றது.
ஆட்சியா் ஆய்வு:
புனித சிலுவை கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியதுவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்- 1 முதல்நிலைத் தோ்வு குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க 5440 விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்திருந்தனா். 2677 போ் தோ்வு எழுதினா். 2763 போ் தோ்வு எழுத வரவில்லை என்றாா் அவா்.
முன்னதாக ஆட்சியா், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி மையத்தில் தனி அறையில் தோ்வு எழுதும் மாற்றுத் திறனாளியை பாா்வையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...