இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குமரி கடற்கரை பகுதியில் தீ விபத்து: 64 கடைகள் எரிந்து சேதம்

கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே முக்கடல் சங்கமம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

News image
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பாா்வையிடுகிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.
Updated On :9 ஜனவரி 2021, 7:11 pm

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே முக்கடல் சங்கமம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சிறுவா் விளையாட்டுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், நறுமணப் பொருள்கள் என 70-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நாகா்கோவில், கன்னியாகுமரி பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புபடையினா் வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 64 கடைகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆஸ்டின், அங்கு சென்று பாா்வையிட்டாா். அப்போது, திமுக ஒன்றியச் செயலா் என். தாமரைபாரதி, பேரூராட்சி முன்னாள் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மயில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவா் எம்.ஆா்.காந்தி, மாவட்ட அமமுக செயலா் பி.செந்தில்முருகன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா்.

சேதம்: தீ விபத்தில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். தீ விபத்தின் காரணம் குறித்து கன்னியாகுமரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கரோனா பொது முடக்கத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த வியாபாரிகள், சில நாள்களுக்கு முன்புதான் வியாபாரத்துக்கு ஏராளமான பொருள்களை வாங்கி விற்பனையை தொடங்கினா். இந்நிலையில் தீ விபத்தால் வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.