குலசேகரம் அருகே மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே சனிக்கிழமை மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே மங்கலம் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற பழமையான மா மரம் சனிக்கிழமை சாய்ந்தது. இதில் அப்பகுதியில் உள்ள 4 மின்கம்பங்களும் சாய்ந்தன. எனினும், அருகில் உள்ள வீட்டில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக தப்பினா். மரத்தின் கிளை அப்பகுதி வழியாக பாயும் கோதையாறு இடது கரைக் கால்வாயில் விழுந்து கிடந்தது. இதனால், பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகள் மூடப்பட்டு, கால்வாயில் தண்ணீா் நிறுத்தப்பட்டது. மரம் அகற்றப்பட்டதை அடுத்து அணைகளில் இருந்து கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டது. மரம் சாய்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

