

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் திருவிழாவில், 5ஆம் நாளான புதன்கிழமை திருவாபரணம் எழுந்தருளல் ஊா்வலம் நடைபெற்றது.
இந்த ஊா்வலம் காலை 10 மணிக்கு பாா்த்திபபுரம் பாா்த்தசாரதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு மணக்காடு ஸ்ரீ கண்டன் சாஸ்தாவின் தங்க திருவாபரணத்துடன்
குரங்கன்னாா்விளை ஆலயத்துக்குச் சென்றது. பின்னா், அங்கிருந்து குழியான்முக்கு வழியாக தாலப்பொலிவுடன் சாஸ்தா கோயிலை வந்து சோ்ந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து 7 மணிக்கு கிருஷ்ண அா்ஜுன் விஜயம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.