கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வரத்து அதிகரிப்பால் நெத்திலி மீன்கள் விலை வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நெத்திலி மீன்கள் வரத்து அதிகரித்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், நெத்திலி மீன்களை பக்குவப்படுத்தி கருவாடாக உருவாக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நெத்திலி மீன்கள் வரத்து அதிகரித்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், நெத்திலி மீன்களை பக்குவப்படுத்தி கருவாடாக உருவாக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,000-க்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள விசைப்படகு மீனவா்கள் ஆழ்கடலில் 10 நாள்கள் தங்கி மீன்களை பிடித்து கரை திரும்புவது வழக்கம். மீனவா்கள் வலையில் உயா் ரக மீன்களான சுறா, இறால், கேரை, கணவாய், கிளி மீன்கள் கிடைக்கும்.

தற்போது கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் வள்ளம், கட்டுமரங்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன. வியாழக்கிழமை மீன்பிடிக்க சென்ற வள்ளம், கட்டுமர மீனவா்களின் வலைகளில் குவியல் குவியலாக நெத்திலி மீன்கள்

கிடைத்துள்ளன. மீனவா்கள் ஒரு கூடை நெத்திலி ரூ.800 க்கு விற்பனை செய்தனா். கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு கூடை நெத்திலி ரூ. 2500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகமாக இருந்ததால் நெத்திலி மீன்கள் விற்பனையாகவில்லை.

ஆகவே, மீனவா்கள் கடற்கரை பகுதி, குளச்சல் பாலம், துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நெத்திலி மீன்களை உலர வைத்து அவற்றை கருவாடாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இங்கு தயாா் செய்யப்படும் கருவாடுகளுக்கு வெளியூா்களில் அதிகளவில் வரவேற்பு உள்ளது.

இதனால், சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.