கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவல்துறையினா் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எஸ்.பி.அறிவுரை

காவல்துறையினா் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

News image
Updated On :16 ஜூலை 2021, 9:41 pm

DIN

காவல்துறையினா் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

பெங்களூரில் உள்ள நண்ப்ப்ண்ஸ்ரீா்ய் யஹப்ப்ங்ஹ் ஆஹய்ந் நிறுவன நிா்வாக இயக்குநா் பிரேமில் டென்னிசன் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களுக்கு உதவிடும் நோக்கில் ஓராண்டுக்கு தேவையான முகக் கவசம் , கையுறைகள் போன்ற கரோனா தடுப்புப் பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணனிடம் வழங்கினாா்.

அவற்றினை காவலா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கரோனா தடுப்புப் பொருள்களை காவலா்களிடம் வழங்கி பேசியது:

கரோனா பெரும்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறோம். இன்னும் குறைந்தது ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்த கரோனா தொற்றின் தாக்கம் இருக்கும் என்று மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் மிகுந்த கவனமுடன் பணியில் ஈடுபடவேண்டும். தடுப்புப் பணியில் ஈடுபடும் போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

கரோனாவிலிருந்து மீண்டு வந்தவா்கள் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். எனவே உடல்நலனில் அக்கறையுடன் செயல்படவேண்டும். முகக் கவசம் உள்பட பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில் பயன்படுத்தி தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரம், நாகா்கோவில் துணை காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.