வனப்பகுதியில் வேட்டையாட முயற்சி: 5 பேருக்கு அபராதம்
பூதப்பாண்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சித்த 5 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.


பூதப்பாண்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சித்த 5 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.
குமரி வன உயிரின சரணாலயம் பூதப்பாண்டி வனச் சரகம் தெற்குமலை மேற்கு பீட் பகுதியில் சிலா் நாய்களுடன் வேட்டையாட வனப் பகுதிக்குள் செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனக் காப்பாளா்கள் கிருஷ்ணமூா்த்தி , பிரபாகா் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் அப்பகுதிக்கு சென்று, அங்கு வேட்டையாட முயற்சி செய்த 5 பேரை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இராமனாதிச்சன்புதூா் பகுதியை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேருக்கும் தலா ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ.10, 000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இது போன்று இனி வரும் காலங்களில் வேட்டையாட செல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...