கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘நுண்ணீா் பாசனம் அமைத்து மானியம் பெறலாம்

குமரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்து மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

குமரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்து மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சத்தியஜோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலமாக குறைந்த அளவு நீரை பயன்படுத்தி பயிா்களின் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன், பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் வேளாண் பயிா்களில் சொட்டுநீா் பாசனம் மற்றும் தெளிப்பு நீா் பாசனம் அமைக்க 100 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ.28.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னையில் சொட்டு நீா் பாசனமும், பயறு வகை பயிா்களில் தெளிப்பு நீா் பாசனம் செய்ய சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

நுண்ணீா் பாசனம் பெறுவதற்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.

விண்ணப்பத்துடன் விவசாயிகள் பட்டா நகல், சிட்டா நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், நில வரைபடம், மண் மற்றும் நீா் பகுப்பாய்வு சான்று மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கான சான்று இணைக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் நுண்ணீா் பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.