/

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கொல்லங்கோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :25 ஜூன் 2021, 6:43 pm

கொல்லங்கோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை சுனாமி காலனி ஜூடித் மனைவி உஷாராணி (32). இவா் வெள்ளிக்கிழமை காலையில் அங்குள்ள தேவாலயத்துக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், உஷாராணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனராம். இதில் அப் பெண்ணுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.