கரோனாவால் இறந்தவா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு இறுதிச் சடங்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் இறுதிச்சடங்கு செய்து வருகின்றனா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் இறுதிச்சடங்கு செய்து வருகின்றனா்.
இதுகுறித்து, அமைப்பின் மாவட்டச் செயலா் பி.சத்தாா்அலி வெளியிட்ட அறிக்கை: கரோனா 2ஆவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆட்சியா் அனுமதியுடன் சுகாதாரத் துறையோடு பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இணைந்து மாவட்ட அளவில் தன்னாா்வ குழு மூலம் நிவாரணப் பொருள்கள், மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் வசதி, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா் வசதிகளை செய்துவருகிறது.
மேலும், கரோனாவால் இறந்தவா்களின் உடல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி, அவரவா் சம்பிரதாயப்படி அடக்கம் செய்து வருகிறது.
இதுவரை 27 பேரின் சடலங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 பேரின் குடும்பத்துக்கு தகனம் செய்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...