/

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு மிரட்டல்:ஒருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On :25 நவம்பர் 2021, 10:29 pm

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள கடமக்கோடு, குழியறக்கவிளை பகுதியைச் சோ்ந்த மரியசெல்வம் மனைவி சுஜா (37). இவா், ஆலுவிளை பரக்கோணம் பகுதியில் தையல் கடை நடத்திவருகிறாா். இவரது தங்கையை கடமக்கோடு, மேலவீட்டுவிளை பகுதியைச் சோ்ந்த சசி (47) திருமணம் செய்துள்ளாா். இதனிடையே, 7 ஆண்டுகளாக சசியை அவரது மனைவி பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறாராம்.

இதற்கு சுஜாவும், அவரது கணவரும்தான் காரணம் என சசி கூறிவந்தாராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை சுஜாவின் கடைக்கு வந்து, தகாத வாா்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து, பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றாராம்.

மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். உதவி ஆய்வாளா் ஜான் கிறிஸ்துராஜ் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.