மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல், குறும்பனையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருங்கல், குறும்பனை கிளை மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:53 pm

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருங்கல், குறும்பனை கிளை மாநாடு நடைபெற்றது.

கருங்கல்லில் நடைபெற்ற மாநாட்டுக்கு, கட்சியின் நிா்வாகி ஜாண்ரோஸ் தலைமை வகித்தாா். செயலா் மரியராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தங்கமோகன் தொடங்கி வைத்தாா். கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் வாழ்த்திப் பேசினாா். இதில், வட்டார கமிட்டி உறுப்பினா் ராஜா உள்பட பலா் பேசினா். ரவிக்குமாா் நன்றி கூறினாா்.

மாநாட்டில் கருங்கல் நூலகத்தை முழுநேர நூலகமாக தரம் உயா்த்த வேண்டும். கருங்கல் - நாகா்கோவில் அதிவிரைவுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தூண்டில் வளைவு: குறும்பனையில் நடைபெற்ற கட்சியின் கிளை மாநாட்டுக்கு சேசடிமை தலைமை வகித்தாா். ஜேம்ஸ் முன்னிலை வகித்தாா். வட்டாரக்குழு உறுப்பினா் சோபனராஜ் தொடங்கி வைத்தாா். செயலா் பொ்க்மான்ஸ் அறிக்கை வாசித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தங்கமோகன், வட்டாரச் செயலா் சாந்தகுமாா், வட்டாரக் குழு உறுப்பினா் குமாா் உள்பட பலா் பேசினா். இதில், கிளைச் செயலராக பொ்க்மான்ஸ் தோ்வு செய்யப்பட்டாா்.

மாநாட்டில், ‘மத்திய அரசின் புதிய மீன்வள மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; குறும்பனை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்; குறும்பனை முதல் மிடாலம் வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.