மாா்த்தாண்டம் அருகே விடுதி காப்பாளா் உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (53). இவா் ஆரல்வாய்மொழியிலுள்ள
பிற்படுத்தப்பட்டோா் தங்கும் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வந்தாா். மது அருந்தும் பழக்கம் கொண்ட இவா்,
கடந்த 1 ஆம் தேதி வீட்டில் இருந்த விஷப் பொடியை சாப்பிட்டு மயங்கி கிடந்தாராம். அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட
அவா், அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (51). திருமணம் ஆகாததால் தனியாக வசித்து
வந்தாராம். நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 2 நாள்களாக வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதையறிந்த அவரது சகோதரா் மகன் கிங்ஸ்டன், அங்கு சென்று பாா்த்த போது கிறிஸ்துதாஸ் வீட்டினுள் இறந்து
கிடந்தது தெரியவந்தது. இவ்விரு சம்பவங்கள் குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.